இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி, இவர் தற்பொழுது ஐ.பி. எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தோனி கிரிக்கெட் ஓய்வுக்கு பின் திரைப்பட தயாரிப்பில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் முதல் படத் தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
சமீபத்தில் அவர் நடித்த சி எஸ் கே விளம்பர படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்ததார்.இந்நிலையில் சென்னையில் அலுவலகம் போட்டு பிஸியாக வேலைகளை செய்துவருகிறது தோனியின் நிறுவனம். இதற்கிடையில் தோனி தனது முதல்படத்தை விஜய்யை வைத்து தான் தயாரிக்க முடிவு செய்திருந்தாராம்.
ஆனால் விஜய் அடுத்தடுத்து சில படங்களை ஏற்கனவே கமிட் செய்துவிட்டதால் எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணலாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தோனியின் முதல் தயாரிப்பில் நயன்தாராவுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- புர்கா படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் நடிகை மிர்னா…!
- சம்பளத்தை உயர்த்தியது குறித்து உண்மையை உடைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!
- ‘ராஜபக்ச குடும்பத்திற்கு இது தேவை தான்’-இலங்கை நிலை குறித்து மகிழ்ச்சிப் பதிவினைப் போட்ட பிரபல நடிகர்
- 8 மில்லியன் பார்வைகளை கடந்த “பத்தல.. பத்தல..” பாடல்..கொண்டாடி வரும் ரசிகர்கள்..!
- திடீரென சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!