கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர்
அத்தோடு இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளதோடு இப்படம் இரண்டு பாகங்களக வெளியாகக் காத்திருக்கின்றது.அதன்படி இப்படமானது செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இதையடுத்து இத் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.
இதையடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலாக ‘சோழா சோழா’ பாடல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!