• Sep 20 2024

அடிக்கடி மோதலில் ஈடுபடும் இனியா மற்றும் பாக்கியா- கோபியை திட்டித் தீர்த்த ராதிகா- பழனிச்சாமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொணடிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்தத வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என் பார்ப்போம்.

அதாவது பழனிச்சாமியின் அம்மா பழனிச்சாமியிடம் கோபி வந்து  பேசிய விஷயத்தைச் சொல்கின்றார். அப்போது பழனிச்சாமி எல்லார் கிட்டையும் சொல்லிப்பார்த்தார். சரி வரல இப்போ உங்க கிட்டையும் சொல்லிட்டாரா எனக் கேட்கின்றார். தொடர்ந்து பாக்கியாவை உனக்கு பிடிச்சிருக்கு தானே அவங்களை நி கல்யாணம் பண்ணிக்கோ என அவரது அம்மா சொல்கின்றார்.


அப்போது பழனிச்சாமி என் மனசிலையும் ஒன்றும் இல்லை அவங்க மனசிலையும் ஒன்றுமில்லை தவறாக நீங்க எண்ணிட்டு இருக்காதீங்க என்று பழனி சொல்கின்றார். மறுபுறம் பாக்கியா வருவதைப் பார்த்த ராமமூர்த்தி இப்ப தான்மா நீ சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று பாராட்டுகின்றார்.

பின்னர் கடைக்கு போய் காலேஜிற்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கனும் இனியாவையும் கூட்டிட்டு போகனும் என்று சொல்ல எழில் போய் இனியாவை அழைக்கின்றார். அப்போது இனியா நான் வரல எனக்கு டாடி வாங்கித் தருவதாக சொன்னாரு நீ மட்டும் போய் வாங்கிக்கோ என்றுசொல்கின்றார்.

இதனை அடுத்து வீட்டில் கோபி ராதிகாவிடம் ஆபிஸில் சரியான வேலை அங்கையும் இங்கைமாக ஓடிட்டு இருந்தேன்.அந்த இடியட் வேற தலைக்கு மேல இருந்து ஆடிட்டு இருக்கிறா என்று சொல்ல கோபமான ராதிகா பாக்கியாவைத் தானே சொல்லுறீங்க, அவங்க கிட்ட போய் அவமானப்பட்டு வந்து நிற்கிறீங்களாஎனத் திட்டுகின்றார்.


மறுபுறம் ஷாப்பிங் போய்ட்டு வந்த இனியாவும் பாக்கியாவும் தாம் வாங்கிய பொருட்களில் யாருடைய பொருட்கள் அழகாக இருக்கு என்று ஒருவொருக்கொருவர் காட்டி சண்டை பிடிக்க எல்லோரும் இருந்து சிரிக்கின்றனர். பின்னர் விடிந்ததும் இனியா காலேஜிற்குப் போக வேண்டும் என்பதற்காக பாக்கியா பூஜை செய்து எழிலுடன் பைக்கில் அனுப்புவதற்காக வெளியில் கூட்டிட்டு வர அங்கே இனியாவுக்காக கோபி காத்திருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement