• Sep 20 2024

பிளஸ் டூ பரீட்சையில் சாதனை படைத்த இனியா- அம்மாவாக நின்ற ராதிகா- பாக்கியலட்சுமி சீரியலில் காத்திருக்கும் அடுத்த டுவிஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டியிவில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்புக் கிடைத்து வருகின்றது. காரணம் ஒரு ஆண் தன்னை விட்டுவிட்டு சென்று விட்டாலும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதும் அடிமட்டத்தில் இருக்கும் பெண்களுக்குள் இருக்கும் திறமை பல நேரங்களில் ஆண்களால் மூடி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் இந்த சீரியலின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றது.

அதுபோல பாக்கியலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அடுத்தடுத்து ஜெயித்துக் கொண்டிருப்பதை அதிகமான ரசிகர்கள் தாங்களே ஜெயிப்பது போன்று நினைத்து பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாக்கியா அடுத்தடுத்து ஒவ்வொரு மாதமும் கோபியிடம் போட்டியிட்டு சவாலில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். 


இந்த நிலையில் சமீபத்தில் தான் பாக்கியா, ராதிகாவிடமும், கோபியிடமும் போட்ட சவாலில் ஜெயித்து வீட்டை தன் வசமாக்கிக் கொண்டார். இந்த நிலையில் இனியா பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து இருக்கிறார். அதற்கான ரிசல்ட் நாளை வரும் என்று இன்றைய எபிசோட்டில் கூறியிருக்கிறார். 


அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் இனியா 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று இருப்பது போன்று மதிப்பெண் பட்டியலும் அதேபோல இனியா மாலையோடு இருக்கும்போது அருகே ராதிகா இருப்பது போன்றும் சில புகைப்படங்கள் இருக்கிறது. இதனால் இனியாவிற்கு பாராட்டு விழா நடக்கும் இடத்தில் கோபியோடு சேர்ந்து ராதிகா தான் அம்மாவாக நிற்க போகிறாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியா வீட்டில் இல்லாததால் ராதிகா இனியா பக்கத்தில் நின்று அடுத்த பிரச்சனை இனி வரப்போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement