• Sep 21 2024

கோபிக்கு அதிர்ச்சித் தகவல் கூறிய இனியா- பாக்கியாவுக்காக சஃப்போட் பண்ணி பேசிய ராதிகா- நக்கலடித்த எழில்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொ்ணடிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகாவீட்டில் எல்லோரும் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி எங்கே என்று அவரது அம்மா கேட்க அவர் மேலே போன் பேசிட்டு இருக்கிறார் என்று சொல்ல கோபி அந்த நேரம் வருகின்றார். எங்கே போயிருந்தீங்க என்று ராதிகாகேட்க, என்னோட ப்ரெண்ட் போன் பண்ணி இருந்தான் அதான் பேசிட்டு இருந்தேன் என்று கூறுகின்றார்.


அவன் பேசும் போது இனியா பியூச்சர் பற்றி பேசினான். இனியா விஸ்கொம் படிக்கிறது பிடிக்கவே இல்லை. எல்லாத்துக்கும் அந்த இடியட் தான் காரணம் அவ தன்னை மாதிரியே இனியாவையும் ஆக்கனும் என்று நினைக்கிறாள் என்று சொல்ல ராதிகா ஒரு அம்மா எப்பிடி தன்னுடைய பொண்ணு லைப்பை காலி பண்ணுவாங்க.

அவங்க பொண்ணு அவங்க பார்த்துப்பாங்க நீங்க விடுங்க கோபி என்று சொல்லி பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ண அந்த நேரம் கோபிக்கு போன் வர கோபி எழுந்து சென்று விடுகின்றார். ராதிகா பாக்கியாவுக்கு சர்ப்போட் பண்ணிப் பேசியதற்காக அவருடைய அம்மா திட்டுகின்றார். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் போது கோபி இனியாவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகின்றார்.

கோபியைக் கண்ட இனியா வெளியில் நின்று பேசுகின்றார். அப்போது காலேஜிற்கு தேவையான பொருட்கள் வாங்கனும் தானே நானே கூட்டிட்டு போய் வாங்கித் தருகிறேன் என்று சொல்ல இனியா இல்ல டாடி நான் மம்மி கூடவே போய் வாங்கிக்கிறேன் என்று சொல்கின்றார். இருந்தாலும் கோபி படிச்ச மேதாபி அவளுக்கு ஒன்றும் தெரியாது நானே வாங்கித் தாரேன் என்று கூறுகின்றார்.


அப்போது இனியா பாக்கியாவும் காலேஜில் சேர்ந்த விஷயத்தைச் சொல்ல கோபி தனக்கு புரியல என்று சொல்ல இனியா, அம்மாவும் படிக்கிறதுக்காக காலேஜில் சேர்ந்திட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைந்ததோடு பாக்கியாவைத் திட்டி விட்டு தனது வீட்டுக்குச் செல்கின்றார்.

அடுத்தாக தனது குடும்பத்தாருடன் இருந்து பேசும் பாக்கியா காலேஜிற்குப் போவதற்காக என்னென்ன வாங்க வேண்டும் என்று கேட்கின்றார். அப்போது இனியா நக்கலடிக்க எழில் அம்மாவை அப்படி ஒன்றும் சொல்லாத சும்மா இரு என்று கலாய்க்கின்றார். பாக்கியாவின் அலப்பறை தாங்க முடியாமல் இனியா உள்ளே எழுந்து போகின்றார்.


தொடர்ந்து வீட்டில் கோபி தனியாக புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த ராதிகா எதுக்காக தனியாக பேசிட்டு இருக்கிறீங்க என்று கேட்ட போது நீ திட்டமாட்ட என்றால் சொல்கிறேன் என்று கோபி சொல்கின்றார். பின்னர் பாக்கியாவும் காலேஜுற்கு போகப் போறாளாம் என்று சொல்ல ராதிகா இவங்க சரியான ட்ராம குயினா இருப்பாங்க போலயே,காலேஜில் எல்லாம் இவங்களால தாக்குப்பிடிக்க முடியாது போன ஒரு வாரத்திலேயே திரும்ப வந்திடுவாங்க பாருங்க என்று சொல்லிவிட்டு செல்கின்றார். இதைக் கேட்டு விட்டு கோபி பாக்கியாவை திட்டிக் கொண்டே இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement