விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் பாக்கியா வீட்டிலேயே ராதிகாவும் கோபியும் இருக்கின்றனர். இதனால் அடிக்கடி ராதிகாவுடன் ஈஸ்வரி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக ஜெனி கீழே விழுந்ததற்கு ராதிகா தான் காரணம் என ஈஸ்வரி சொல்லியதால் கோபியும் அதனை நம்பித் திட்டி விட்டார். இதனால் ராதிகா கோபி மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்.
இது தவிர பழனிக்கும் ராதிகாவுக்கும் இடையில் தொடர்பு இருக்கு என்றும் கோபி சந்தேகப்படுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் புதிதாக இணைந்தவர் தான் அரவிந்த். இவர் கோபின் நண்பன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது நான் பொதுவாக ரீப்ளேஸ்மென்ட் ஆக நடிப்பதில்லை. விஜய் டிவியில் நடிச்சு நிறைய நாள் ஆகிடுச்சு . அத்தோடு சதீஷ் என்னோட நிறைய நாள் நண்பர் அதனால் தான் நடிக்க சம்மதிச்சேன்.
எல்லோரும் நான் நடிக்க வருகிறேன் என்று சொன்ன போது கோபி கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க வருகிறேன் என்று நம்பினாங்க.ஏற்கனவே இரண்டு சீரியலில் சதீஷின் ரீபிளேஸ்மென்ட்ல நடிச்சிருக்கிறேன். ஆனால் இந்த சீரியலில் அவர் தான் கோபி. நான் அவருடைய பிரண்ட் மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!