• Sep 21 2024

"இருப்பா ஏய்.. சொல்றேன்பா.."புகழை பேசவிடாத ரசிகர்கள்..நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை அதிகமான அளவில் ஈர்த்தவர். எனினும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

அந்தவகையில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'ஆகஸ்ட் 16, 1947'.இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.அறிமுக நடிகை ரேவதி நடிக்கின்றார்.அதுமட்டுமல்லாது இதில் குக்வித்கோமாளி புகழும் நடி்துள்ளார்.இப்படம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக  வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி கூற வந்துள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  இப்படம் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வாரம்இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடியோலோஞ்சில் புகழும் பேசி இருந்தார்.அவர் எல்லா நடிகர்களைப் பற்றியும் பேசியிருந்த நிலையில் அவரை பேசவிடாது ரசிகர்கள் கலாய்த்து இருந்தனர்.அதற்கு புகழ் “ இருப்பா ஏய் ...சொல்றேன்பா..” எனக் கூறியும் அவர்கள் விடாது கலாய்த்து இருந்தார்கள்.பட் பற்றி கேட்க அதற்கு சாமர்த்தியமாக பேசி இருந்தார்.


Advertisement

Advertisement