இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் நாககார்ஜுனா.இவரின் முத்த புதல்வரான நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதன் பின் 4வருடம் வாழ்ந்த இருவரும் திடீரென பிரிவதாக அறிவித்து இருந்தார்கள்.இது சமந்தா ரசிகர்களுக்கும் நாக சைதன்யா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பிறகு இவர்களின் விவாகரத்து பற்றி பதல தகவல்கள் மற்றும் வதந்திகள் என சோசியல் மீடியாவில் தீயாக பரவியது.
இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, " சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்க வேண்டும்".
"சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எங்களை குறித்து வெளியாகும் வதந்திகள் எங்களிடையே உள்ள நல்லுறவை பாதிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவைப்பற்றி இப்படி உருக்கமாக பேசியதால் இவர்கள் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என எண்ணி பல பதிவை இட்டு வருகிறார்கள்.அத்தோடு நாகசைதன்யா இப்படி பேசியதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Listen News!