விஷாலின் ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி அதன் பின்னர் தனுஷ் உடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதனை அடுத்து விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி என்னும் திரைப்படத்தில் நடித்து வேற லெவல் வரவேற்பைப் பெற்றார்.இந்த நிலையில் இவர் பெருமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அர்ஜுன் தாஸைக் காதலிப்பதாக கூறப்பட்டது.
அதாவது நேற்று ஐஸ்வர்யா லக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் ஒரு போட்டோ பதிவிட்டு இருந்தார். அதில் அவர் ஹார்டின் எமோஜியை மட்டும் போட்டிருந்ததனால் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என செய்தி பரவியது. இருவருக்கும் 32 வயது தான் ஆகும் நிலையில் எப்படி காதலிக்க முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வந்தனர்.
இந்நிலையில் அர்ஜுன் தாஸை காதலிப்பதாக பரவிய செய்திக்கு தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மி விளக்கம் கொடுத்து இருக்கிறார்."என் முந்தைய பதிவு இவ்வளவு பெரிதாக வெடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்தித்தோம், போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை தான் பதிவிட்டு இருந்தேன். எங்களுக்குள் எதுவும் இல்லை, நாங்கள் நண்பர்கள் மட்டும் தான்" என அவர் தெரிவித்து இருக்கிறார்.
Listen News!