அஜித்தின் தந்தையின் மறைவைத்த தொடர்ந்து அவர் குறித்த பல விடயங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. குறிப்பாக அஜித்தின் தந்தை குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் யாரும் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவரைப் போலவே அவரது குடும்பத்தினரும் மீடியா பக்கம் வர விரும்பாதவர்கள்.
இந்நிலையில் அஜித்தின் இளைய சகோதரர் அனில்குமார் தனது தந்தை குறித்து பேசியிருக்கும் விஷயம் ஆனது தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் "அனைத்து க்ரெடிட்டுகளையும் எங்களது பெற்றோருக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களை ஸ்ட்ரிக்ட்டாக வளர்க்கவில்லை. நிறைய சுதந்திரம் கொடுத்தார்கள். எங்கள் அப்பா போராளி போன்றவர்" என்றார்.
மேலும் "அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லை. எந்த டிகிரியும் வாங்கவில்லை. ஆனால் அவர் பெரிய ஸ்மார்ட். இந்த வயதிலும் புது டெக்னாலஜி பயன்படுத்துவதிலும், இணையம் உபயோகப்படுத்துவதிலும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். அந்தவகையில் எங்களது தந்தையும், தாயும் வேறு வேறு கலாசாரத்தை உடையவர்கள். தந்தை தமிழர். தாய் கராச்சியை சேர்ந்தவர். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது கொல்கத்தாவிற்கு வந்துவிட்டார்.
எங்களது தந்தையும் தாயும் கொல்கத்தாவில் தான் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருப்பினும் எமது தந்தைக்கு அடிக்கடி பணி மாறுதல் நடக்கும். அதனால் கொல்கத்தாவிலிருந்து கான்பூர், லக்னோ, ஹைதராபாத் வந்தோம். அதன் பிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம்" எனக் கூறியுள்ளார்.
அனில்குமாரின் இந்தப் பேட்டியினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித்தின் தந்தை இப்படியான ஒருவரா என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
Listen News!