• Sep 21 2024

வீட்டில நடக்கிற பிரச்சினைக்கு இதெல்லாம் கட்டாயம் தேவை தானா?- போலீஸ் ஸ்டேசன் முன்னால் ஆட்டம் போட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம் என எடுத்துறைக்கும் சீரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.குடும்பத்தை விட்டுப் பிரிந்த அண்ணன் தம்பிகள் பழையபடி ஒன்றாக சேர ஆரம்பித்து விட்டனர்.அதிலும் கண்ணன் லஞ்சம் வாங்கி பெரிய பிரச்சினையில் சிக்கி தற்பொழுது அதிலிருந்து மீண்டுவிட்டார்.

இப்போது தனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் தனத்திற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் முல்லையும் மீனாவும் இருக்கின்றனர்.


மேலும் திருச்சிக்கு போய் ஆபரேஷன் செய்து விடவேண்டும் என்பதற்காக பல பொய்களையும் மீனாவும் முல்லையுமு் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் வீட்டில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் ஐஸ்வர்யா வீடியோ எடுப்பதில் குறியாக இருக்கின்றார்.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் சேர்ந்து போலீஸ் ஸ்டேசன் முன்னால் குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைராகி வருவதைக் காணலாம்.






Advertisement

Advertisement