• Sep 20 2024

அமிர்தா எழிலை விவாகரத்து செய்யப்போகின்றாரா?- கோபி வெளியிட்ட அதிர்ச்சிப் போட்டோ- ஒரு லாஜிக் வேணாமாப்பா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

சீரியலின் கதைப் படி கோபி மீண்டும் ராதிகா உடன் பாக்யாவின் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். ராதிகா பாக்கியாவுடன் சண்டை போடாமல் பாக்கியாவுக்கு ஆதரவாக இருப்பது தான் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது


தற்பொழுது செழியன்-ஜெனி, எழில்-அமிர்தா திருமண வாழ்க்கையில் பெரிய சிக்கல்கள் வந்திருக்கிறது. இதனால் கதை தற்போது பரபரப்பாக நகர தொடங்கி இருக்கிறது. செழியனுடன் ஜெனி சேரக் கூடாது என்பதற்காக ஜெனி வீட்டிலிருந்து செழியனுக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிட்டனர்.

இது ஒரு புறம் இருக்க அமிர்தாவின் கணவர் எழில் மீண்டும் வந்து அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு பிரச்சினை செய்து கொண்டிருக்கின்றார். இதனால் பாக்கியா குடும்பம் மொத்தமும் குழப்பத்தில் இருக்கின்றது.


இந்த நிலையில் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினைப் போட்டுள்ளார். அதில், விவாகரத்து பெறுவதற்காக எழிலும் குகடும்பநல் நீதி மன்றத்திற்கு வரப்போகின்றார் என்று இதைப் பார்த்த பலரும் அமிர்தா எழிலை விவாகரத்து செய்யப்போகின்றாரோ,எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement