விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாரதிகண்ணம்மா.இந்த சீரியல் தற்போது 900 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது .அதில் பாரதியும், கண்ணம்மாவும் எப்போது ஒன்று சேர்வார்கள், சீரியலை எப்போது தான் முடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் பாரதியின் மருத்துவமனையில் தீவிரவாதிகள் புகுந்துவிட்ட நிலையில் அதில் கண்ணம்மா மற்றும் பாரதி ஆகியோர் இதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் தற்போது காட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வார ப்ரோமோவில் ஹாஸ்பிடலுக்கு புகுந்து அதிரடி படையினர் எல்லோரையும் காப்பாற்றி வருகிறார்கள். மேலும் அந்த நேரத்தில் பாரதி மட்டும் வரவில்லை என்பதால் அவரை தேடி செல்கிறார் கண்ணம்மா.
அவரை ஒரு அறையில் கட்டி தொங்கவிட்டு உள்ளனர்.அந்த நேரம் பார்த்து கண்ணம்மா உள்ளே வருகின்றார்.அந்தநேரம் கண்ணம்மாவை வர வேண்டாம் என பாரதி தடுக்கிறார். அதற்கு காரணம் அவர் உடலில் டைம்பாம் இருந்தது தான்.
ஆனால் கண்ணம்மா அவர் விட்டு செல்லாமல் அவரை கட்டிபிடித்து கொள்கிறார். மேலும் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த வாரத்தோடு சீரியல் முடிந்துவிடுமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Listen News!