தனது சினிமாப் பயணத்தின் ஆரம்பத்தில் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தான் தேவயானி.இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படமான காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
தொடர்ந்து விஜய் சரத்குமார் கார்த்திக் பார்த்திபன் அஜித் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தார். இவ்வாறு பிஸியாக நடித்து வந்த போது ராஜகுமாரன் என்ற இயக்குநரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்பொழுது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் தேவயானி நடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களில் நடிதது வருகின்றார். குறிப்பாக ஷு தமிழ் தொலைக்காட்சியில் அண்மையில் முடிவடைந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
இப்படியான ஒரு நிலையில் இவருடைய மூத்த மகள் புடவை கட்டி எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரிகர்கள் அடடே அம்மாவைப் போலவே அழகாக இருக்கின்றாரே சினிமாவுக்குள் இவரும் காலடி எடுத்து வைக்கப் போகின்றாரா எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!