பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர். ரீல்ஸ் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தனலட்சுமிக்கு ஏராளமான ஃபாலோபர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் தான் இவர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக பங்கேற்றுள்ளார் தனலட்சுமி. தனலட்சுமி எதையும் மறைக்காமல் நேராகவே உள்ளதை உள்ளப்படி பேசி வருகிறார். தைரியமாக தவறை சுட்டிக்காட்டும் தனலட்சுமி, டாஸ்க்குகளிலும் அதிரடியாக மிரட்டி வருகிறார்.
இருப்பினும் சமீப காலமாக தனலட்சுமி அதிக கோபப்படுவதால் அதிருப்தியையும் சம்பாதித்து வருகிறார். அத்தோடு கமல்ஹாசனே கோபத்தை குறைக்க வேண்டும் என அறிவுரை கூறியும், அவர் கோபத்தை கட்டுப்படுத்தாமல் உள்ளார். இதனால் நாளுக்கு நாள் இவர் மீது பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தான் அவரின் அம்மா தற்போது லைஃப் வீடியோ மூலமாக தனது மகள் குறித்த உண்மையை ரசிகர்கள் பலருக்கும் கூறி வருகின்றார். அதாவது "பணம் குடுத்து தனலட்சுமியை பிக்பாஸ் வீட்டுக்குள்ள எடுக்கல. பொதுமக்கள் சார்பில் இருந்து தனலட்சுமியை எடுத்திருக்காங்க" எனக் கூறியிருக்கின்றார்.
மேலும் "இப்போதைய நிலையில் ஷாட் பிலிம் எடுக்கிறதற்கு எல்லாம் அதிகளவு பணம் தேவையில்லை, எல்லாருமே கையில மொபைல் வச்சிருக்காங்க. அதன் மூலமாக டிக்டாக், ஷாட் வீடியோ எல்லாம் எடுக்கலாம். மேலும் டிக்டாக்கில் இருந்து ஒருத்தரை எடுத்திருக்காங்க என்ற பொறாமையில் தான் தனலட்சுமி மேல் எல்லாருமே இந்தளவிற்கு கோபப்படுறாங்க" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு "பணத்தை எரிக்கிறாங்க என்று கூறியிருந்தாங்க, அது பொம்மை நோட்டு, அது இப்பவும் எங்க சாமி ரூம் ல அப்பிடியே தான் இருக்கு. ஒரிஜினல் நோட்டை சுற்றி வைத்து விட்டிட்டு பொம்மை நோட்டைத் தான் அவங்க நடுவில வைச்சு எரிச்சாங்க. அது ஒரு படத்தில் இடம்பெற்ற சீன்ஸ். அதை தான் அவள் பண்ணி இருக்காள் " எனவும் தெரிவித்து இருக்கின்றார். அத்தோடு சிகரெட் குடித்த மாதிரி வீடியோ போட்டமைக்கான காரணம் என்ன தெரியுமா "கவர்ச்சியாக வீடியோ போட என் மகளுக்கு பிடிக்காது அதனால் தான் அப்படி வீடியோ போட்டாள்" என்றார்.
மேலும் தனலட்சுமி வெளியேறுவாரா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "அது உள்ளேதான் இருக்கும் நன்றாக விளையாடும். கஷ்ட்டப்பட்ட ஒரு பிள்ளைக்கு சான்ஸ் குடுத்த விஜய் டிவியில் உள்ள அந்த சேனலின் உடைய முக்கியமான ஒரு நபருக்கு என்னோட நன்றிகள். அவர் எங்களுக்கு இப்ப கடவுள் தானுங்க" என மிகவும் எமோஷனலாக தெரிவித்து இருக்கின்றார்.
அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அவர் "நான் நல்லாய் தான் இருக்கேன். தனலட்சுமியை பொதுமக்கள் சார்பில் இருந்து உள்ளே எடுத்திருக்காங்க. அதனால தனலட்சுமி வெளியே வராது, அது உள்ளே தான் இருக்கும், நல்லா இருந்து விளையாடும்" எனத் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.
Listen News!