• Sep 20 2024

இயக்குநர் அட்லி அடுத்ததாக அஜித்தை வைத்து தான் படம் இயக்கப் போகின்றாரா?- அவரே கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குநராக மாறியவர் தான் அட்லி.  ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸிம், ஜெய் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.அதனை அடுத்து விஜய்யுடன் இணைந்து தெறி படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்களின் அமோக வெற்றியை பெற்றதால் மீண்டும் அவருடன் கைகோர்த்து  மெர்சல், பிகில் என gல படங்களை இயக்கி இருந்தார்.இதுவரை கோலிவுட்டில் மாஸ் காட்டிய அட்லி, தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், நயன்தாரா, யோகி பாபு, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


 இந்நிலையில், ஜவான் படத்துக்குப் பின்னர் அட்லி எந்த ஹீரோவை இயக்கப் போகிறார் என இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், ஜவான் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அட்லி, தனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றியும் மனம் திறந்துள்ளார். ஜவான் படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்த அட்லி, விரைவில் விஜய் - ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என்றார்.


மேலும், அட்லி  அஜித்துடன் இணைவது குறித்தும்  மனம் திறந்துள்ளார். இயக்குநர், தயாரிப்பாளர் என்ற முறையில் அனைவருடனும் இணைய வேண்டும் என்பதே தனது ஆசை. அஜித் சாருடன் இணைய சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக அவரையும் இயக்குவேன் என அட்லி கூறியுள்ளார். விஜய்யின் செல்ல தம்பியான அட்லி, அஜித்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது ரசிகர்களிடம் ஹைப் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement