• Sep 20 2024

பிரச்சினையால் தான் விக்ரமுடன் ப்ரோமோஷனுக்கு வரவில்லையா...ட்வீட் போட்ட இயக்குநர் ஞானமுத்து..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரமுடன் கோப்ரா ப்ரோமோஷனுக்கு வராதது பற்றி விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தெரிந்தெடுத்து நடிப்பதில் முக்கியமானவராக வலம் வருபவர் தான் விக்ரம். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்புக்களில் நடிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக கே.ஜி.எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் விக்ரம் ஈடுபட்டு இருக்கிறார்.

சென்னை, திருச்சி, மதுரை, கேரளா, ஆந்திரா, பெங்களூரு என பல இடங்களில் கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்று வருகிறார்.

அத்தோடு விக்ரம் உடன் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலியில் ஆகியோர் தான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் இயக்குநர் அஜய் ஞானமுத்து எதிலும் பங்கேற்க்கவில்லை. அது ஏன் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அவரே அது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் தான் கலந்துகொள்ளவில்லை, விரைவில் நானும் அவர்களுடன் கலந்துகொள்வேன் என தெரிவித்து இருக்கிறார் அஜய் ஞானமுத்து. 







Advertisement

Advertisement