• Sep 21 2024

குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா- நடிகர் மன்சூர் அலிகான் மாட்டுக்கு என்னல்லாம் பண்றாரு பாருங்க!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்தன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் விஜய்காந்துடன் நடித்திருந்த கேப்டன் திரைப்படம் கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக , காமெடி கதாபாத்திரங்களில் அதிக படங்களில் நடித்து வருகின்றார்.
அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் பக்ரீத்தையொட்டி அன்னதானம் செய்த வீடியோவும் வெளியானது.

மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். அந்த மாட்டை அவர் குளிப்பாட்டி தீவனம் வைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த மாட்டுடன் பேசிக்கொண்டே அவர் குளிப்பாட்டி விடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.

பாரு நீ குளிக்காம இருந்ததாலே உடம்பெல்லாம் அழுக்கு, வாலெல்லாம் சாணி என்பதாக அந்த மாட்டுடன் அவர் பேசுகிறார். மாட்டின் உடலெங்கும் தனது கையாலேயே தேய்த்து விடுகிறார். தொடர்ந்து மாடு அங்கும் இங்கு போகிறது.

இதனிடையே மாட்டிடம் குளியல் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா என்றும் பாடல் மூலம் கேள்வி எழுப்புகிறார். வெட்கப்படக் கூடாது என்றும் அறிவுரை வழங்குகிறார். தொடர்ந்து குளிப்பாட்டி முடித்தவுடன் மாட்டிற்கு தீவனம் வைக்கிறார்.

அதில் கோதுமை மாவு, அரிசி மாவை கலந்துள்ளதாகவும் அப்பொழுதுதான் கன்றுக் குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியும் என்றும் மாட்டிடம் கூறுகிறார். சிறந்த நடிகராக உள்ள மன்சூர் அலிகான், ஒரு வேலையாளை வைத்து இந்த வேலைகளை முடித்துக் கொள்ளாமல் தானே களத்தில் இறங்கியது அனைவரையும் கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement