கடந்த 2004ல் ஹோ கயா நா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.அதன் பின்னர் தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படத்தில் அறிமுகமானார்.
இப்படத்தினைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னை பிசியாக்கிக் கொண்ட காஜல் அகர்வாலுக்கு ராம்சரணுடன் நடித்த மகதீரா திரைப்படம் சிறந்த நடிகையாக அறிமுகப்படுத்தியது. இதனால் தமிழில் விஜய் விஷால் தனுஷ் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இதையடுத்து கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீல் என்ற ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நெற்றைய தினம் எல்லோரும் விநாயக சதுர்த்தி கொண்டாடிய நிலையில் நடிகை காஜலும் கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.அது என்னவென்றால் விநாயகரை கும்பிடுவது போல் புகைப்படம் எடுத்த நீங்கள் இருவரும் உங்கள் பாதணிகளை கழட்டக் கூடாதா..?கடவுளை கும்பிடும் போது கூட பாதணி தேவையா..? போட்டோக்கு போஸ் கொடுக்க உங்களுக்கு எப்படி கடவுள் பக்தி இருக்கும் என கேட்டு வருகிறார்கள்.
இன்னும் சிலர் அது வெறும் அலங்காரமே.அவர்கள் சாமியை கும்பிடவில்லை .எனக் கூறி காஜலுக்கு ஆதரவாகியும் பேசி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!