விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
மேலும் தற்பொழுது கோபி தனது வீட்டை விற்கப் போவதாக கூறி விட்டார். இருந்தாலும் அந்த வீட்டை ஒரு மாதத்திற்குள் வாங்கி விடுவதாகவும் எழில் சவால் விட்டிருக்கின்றார். இதனால் எழில் தனது கதைகளை விற்று வீட்டை வாங்குவாரா இல்லையா, பாக்கியா ஏதாவது செய்கிறாரா அல்லது கோபி ஜெயிப்பாரா என எதுவும் தெரியவில்லை.
இன்று எழில் அமிர்தாவை பற்றி பேச மாட்டேன், அதேசமயம் வர்ஷினியை திருமணம் செய்ய மாட்டேன் என்று தாத்தா-பாட்டியிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்த நேரத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் சுசித்ரா மற்றும் ரேஷ்மா அடிக்கும் லூட்டியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா வீட்டில் பூ மாலை எல்லாம் போட்டு வைத்துள்ளார்கள்.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதைக் காணலாம்.
,
Listen News!