• Sep 21 2024

ஊரையே பயமுறுத்திய நடிகைக்கு இதை பார்த்தால் பயமா..? அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நாகினி தொடரில் நாகினியாக நடித்து ரசிகர்களை மிரட்டிய மவுனி ராய் தற்போது பாலிவுட்டில் பிசியாகிவிட்டாராம்.அத்தோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

அப்படி அவர் நடுவராக இருக்கும் DID L'il Masters 5 நிகழ்ச்சியில் 11 வயது சாதியா ஜோக்கர் வேடமிட்டு வந்ததை பார்த்த மவுனி ராய் பயந்துவிட்டாராம்.

அதைப் பற்றி மவுனி ராய் தெரிவித்ததாவது..

சாதியாவின் நடிப்பை பார்த்து பயந்துவிட்டேன். இப்பொழுதும் புல்லரிக்கின்றது. சிறுவயதிலிருந்தே எனக்கு ஜோக்கர் என்றால் பயம். இது பலருக்கும் தெரியாது. நான் சிறிய ஊரை சேர்ந்தவள். எப்பொழுது சர்கஸ் பார்க்கச் சென்றாலும், முகத்தில் பெயிண்ட்டுடன் இருப்பவர்களை பார்த்து பயப்படுவேன்.

மேலும் லைட்ஸ் ஆஃப் ஆன நேரத்தில் சாதியா வந்தார். லைட்டை போட்டதும் தான் அவரின் முகத்தை பார்த்தேன். ஜோக்கர் வேடத்திலிருந்ததை பார்த்து பயந்துவிட்டேன். இதன் மூலம் அவர் உண்மையான கலைஞர் என்பதை நிரூபித்துவிட்டார்.

ஜோக்கரை பார்த்தால் மக்கள் சிரிப்பார்கள். ஆனால் மவுனி ராய் இப்படி பயப்படுகிறாரே என்கிறார்கள் ரசிகர்கள்.மேலும் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை தன் காதலர் சுராஜ் நம்பியாரை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார் மவுனி ராய்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement