தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
இவர் அஜித், தனுஷ், சூர்யா, விஷால், கார்த்தி, பிரபாஸ்,ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு என ஏராளமான ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்பொழுது கதாப்பாத்திங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் 70சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி விமானத்தின் மூலம் ராஜஸ்தான் சென்றுள்ளார்.தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகி வருகிறது.
ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வரும் தமன்னா, சாமியார் தோற்றத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலுக்குள் நுழையும் போது ஒருவிதமான அருளை என்னால் உணர முடிந்தது.
வாழ்க்கை குறித்த பயம், மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து வருத்தம் என அனைத்தையும் மாற்றிவிடும். இதை நான் உறுதியாக நம்புவதால், லிங்கபைரவி யந்திரத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல நினைத்தேன், இதற்காக ஈஷோ யோகா மையம் ஒரு வழிகாட்டி உள்ளது. அவர்கள் வழிபாடு செய்து லிங்கபைரவி சிலை வீட்டுக்கு தருகிறார்கள் என்றார். எதுவாக இருந்தாலும் காவி உடை,நெற்றியில் குங்குமம், கழுத்தில் சாமிக்கயிறுடன் இருந்த தமன்னாவைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!