சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. தற்போது வரை 375.4 கோடி ருபாய் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி விழா இன்று நடந்து முடிந்திருக்கிறது. நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஜெயிலர் வெற்றிக்கு நன்றி கூறி இருக்கின்றனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா மேனன் நடிப்புக்கும் தற்போது இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அவரை பற்றி அதிகம் பதிவுகளையும் சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.
மிர்னா மேனன் இதற்கு முன்பு தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படங்களில் நடித்து இருக்கிறார். அப்போது நடிகர் அபி சரவணன் என்பவருடன் காதலில் விழுந்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அவர்களது விவகாரத்து வழக்கு சில வருடங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்றது என்பது. குறிப்பிடத்தக்கது.
Listen News!