• Sep 20 2024

மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா கரினா கபூர் -வெளியான உண்மை தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் உள்ள சூப்பர் ஜோடிகளில் சந்தேகத்திற்கு இடமின்றி சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஜோடி முக்கியமானவர்கள்.மேலும் அவர்கள் ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் ஆகிய இரண்டிலும் அற்புதமான கெமிஸ்ட்ரிக்கு பெயர் பெற்றவர்கள்.

அத்தோடு கடந்த 16 அக்டோபர் 2012 அன்று, மும்பையில் உள்ள பாந்த்ராவில் நடிகர் சைஃப் அலிகானை கரினா கபூர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 2016 மற்றும் 2021 இல் இரு மகன்கள் பிறந்தனர்.

இவ்வாறு இருக்கையில் கரீனா தற்போது தனது கணவர் சைஃப் அலி கான் மற்றும் மகன்கள் தைமூர் மற்றும் ஜஹாங்கிர் ஆகியோருடன் ஐரோப்பாவில் விடுமுறையில் இருக்கிறார். விடுமுறையில் இருந்து அவரது புகைப்படம் ஒன்று வைரலானது.அந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்தன.

மேலும் இந்த செய்திகளை மறுத்து, கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “அது பாஸ்தா மற்றும் ஒயின் நண்பர்களே…அமைதியாக இருங்கள்…நான் கர்ப்பமாக இல்லை.. உஃப்….நமது நாட்டின் மக்கள்தொகைக்கு அவர் ஏற்கனவே அதிக பங்களிப்பை செய்திருப்பதாக சைஃப் கூறுகிறார்…மகிழுங்கள்…KKK ." என கரினா பதிவிட்டுள்ளார். சைஃப் அலிகானுக்கு ஏற்கனவே சாரா அலிகான், இப்ராஹிம் என இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கரீனா இப்போது தனது அடுத்த படமான லால் சிங் சத்தாவின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார்.அத்தோடு அதில் கரினா அமீர் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஹாலிவுட் படமான தி ஃபாரஸ்ட் கம்ப்பை அடிப்படையாகக் கொண்ட லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் சயிப் அலிகான் விக்ரம் வேதா படத்தின் செப்டெம்பர் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement