• Sep 20 2024

'லியோ' விஜய் அரசியலுக்கு போட்ட அஸ்திவாரமா? நரிக்குறவர்கள் சொன்ன ஸ்பெசல் கருத்து

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்ற நிலையில், படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், லியோ படம் பார்ப்பதற்கு வந்த நரிக்குறவர்கள் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் தெரியவருவது, வடசென்னை பாரத் திரையரங்கில் காலை 9 மணி சிறப்பு காட்சிகளை காட்சிகளை காண வந்த அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் டிக்கெட்டை கேட்டுள்ளனர். 


இதனால் திரையரங்க நிர்வாக சார்பாக 14 பேருக்கு சிறப்பு காட்சிகளுக்கான காட்சிகளுக்கான டிக்கெட்டை வழங்கி படம் பார்க்க வைத்தனர். அவர்கள் இருக்கையில் அமர்ந்து விசில் அடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்து வந்தனர்.

திரையரங்கை விட்டு வெளியே வந்த பேசிய நரிக்குறவ மக்கள், 'விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தான் வாக்களிப்போம்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இதேவேளை,  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement