திரைப்படங்களில் வில்லியாக நடிக்கும் சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர்.
வில்லி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை மிரட்டிய நடிகை தான் சூசன் ஜார்ஜ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அமலாபால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மைனா படத்தில் ஜெய்யிலரின் மனைவியை சுதாவாக வந்து தன நடிப்பை பதிய வைத்திருந்தார் சூசன்.இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விதார்த், அமலா முக்கிய வேடங்களிலும் தம்பி ராமையா துணைவேடத்திலும் நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்திற்குப் பினு்னுரு் அமலா பாலுக்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் ரசிகர்களை தனது முட்டை கண்ணால் மிரட்டி இருந்தவர் தான் சூசன் ஜார்ஜ். இவரின் நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது. கணவரை மிரட்டுவதும் நாயகியை துன்புறுத்துவதும் என அசத்தியிருந்தார் இவர்.
ஆனால் இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோன்ற எந்த வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து துணை வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் சூசன். நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, அர்ஜுனன், காதலி, நண்பேண்டா, ராட்சசன், ஜாக்பாட், ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
எனினும் சமீபத்தில் பிக்பாஸில் இடம் பெற்ற சேரன், சினேகன், சரவணன் உள்ளிட்டோர் இணைந்து உருவாகி இருந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தில் சேரனின் மனைவியாக நடித்திருப்பார். மேலும் அவரது நடிப்பு இந்தப் படத்தில் பாராட்டுக்களையே பெற்றிருந்தது. அத்தோடு விஜய் டிவிகள் சுழியம், ரோஜாக்கூட்டம், சன் டிவியில் தென்றல், அத்திப்பூக்கள், தியாகம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து அசத்தி இருந்தார் சூசன்.
பிக் பாஸ் சீசன் 5-ல் இவர் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவலும் பரவி அப்போது ட்ரெண்டாகி அவர் கலந்து கொண்டிருந்தால் இன்னொரு வனிதாவாக இருந்திருப்பார் என ரசிகர்கள் கூறி வந்தனர். எனினும் இதற்கிடையே சூசன் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. அவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? எப்போது திருமணம் நடந்தது என பல கேள்விகளை ரசிகர்கள் தொடுத்திருந்தனர்.
Listen News!