சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு சமந்தா மீது தப்பா? நாக சைதன்யா இன்னொரு பெண்ணை காதலிக்கிறாரா? என ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.
ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இருவருமே அடுத்ததாக யாருடனும் டேட்டிங் செல்வது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
மேலும் இருவரும் தொடர்ந்து தனியாகவே தங்களது சினிமா பயணத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். மனைவி சமந்தா பாலிவுட்டில் சாதித்த நிலையில், தானும் பாலிவுட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நாக சைதன்யா.
இதற்கிடையே நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதா துலிபாலா உடன் அவ்வப்போது ஒன்றாக காணப்படுவதாக தகவல்கள் பரவி வந்தன.
எனினும் சமீபத்தில் லால் சிங் சந்தா திரைப்படத்திற்காக நாக சைதன்யா அளித்துள்ள பேட்டியில், பிரபல நடிகர்கள் குறித்து பதிலளித்துள்ளார்.
அப்போது ஷோபிதா துலிபாலாவின் பெயர் வந்தவுடன் நாக சைதன்யா “நான் சிரித்து மட்டும் கொள்கிறேன்” என சத்தமாக சிரித்துள்ளார்.
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!