• Sep 20 2024

விஜய் டிவியில் இருந்து விலகியது கர்ப்பமானது மட்டும் காரணமில்லையா ? இது என்ன புதுக்கைதை..ஆல்யா பற்றி வெளியான தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இருந்த ஆலியா மானசா வெளியேறியதற்கு பிரசவம் காரணம் இல்லை என்ற திடுக்கிடும் தகவல் தற்போது  சமூகவலைத்தளத்தில்  வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானஷா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார்கள் சஞ்சீவ் – ஆல்யா. இதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.


இதன் பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அத்தோடு இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத் திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.



விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல், சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இதன் பின் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார். அதனால் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை அடுத்து தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.



அத்தோடு  இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களுடைய சேனலை லட்சக்கணக்கான பேர் பாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஆல்யா அவர்கள் குடும்பம், குழந்தைகள், கணவருடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். தாங்கள் ஆரம்பித்துள்ள சேனல் மூலம் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இரண்டாவது குழந்தைக்கு பின்னர் ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார்.


சமீபத்தில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா, நான்கு கதை கேட்டிருக்கிறேன். மேலும் அதில் இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. எந்த சேனல் என்று இன்னும் கொஞ்ச நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷம் படும் படியான சேனலில் தான் நடிப்பேன். அதேபோல் இன்னும் இரண்டு மாதத்தில் சீரியலில் என்னை பார்க்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.. இந்த நிலையில் விஜய் டிவி சீரியல் இருந்து ஆலியா மானசா விலகியதற்கு பிரசவம் காரணம் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பிரசவத்திற்காக தான் ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி இருந்தார். இது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், இவர் சீரியல் இருந்து விலக பிரசவம் மட்டும் காரணம் இல்லை என்ற தகவல்  தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இவர் மீண்டும் சின்னதிரையில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால், இவர் விஜய் டிவி சீரியலில் நடிக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர் சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலில் நடிக்கப் போகிறார் என்று குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement