• Sep 21 2024

பாக்கியாவைச் சந்தித்த ராதிகா உண்மையைக் கூறப் போகின்றாரா?- ஷுட்டிங் செட்டில் இருந்து கசிந்த புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் இல்லத்திரிசிகளைக் கவர்ந்த சூப்பர் ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருப்பது பாக்கியலட்சுமி சீரியல் ஆகும். ரி ஆர் பியிலும் முன்னணியில் நிற்கும் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாகவும் திருப்பங்களுடனும் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இத்தனை காலமும் பாக்கியா தான் தன்னுடைய மனைவி என்பதை மறைத்து வைத்திருந்த கோபி தானாகவே போதையில் தனது மனைவி பாக்யா தான் என்ற உண்மையை ராதிகாவிடம் கூறி விட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

பாக்கியாவிற்கு உண்மை தெரிய வருமா என பல கேள்விகளை ரசிகர்கள் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில் இப்போது பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வந்துள்ளது. அதில் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வந்திருப்பது தெரிகிறது.

ராதிகா பாக்கியாவிடம் உண்மையை கூறிவிடுவாரா அல்லது தன்னை தனது காதலர் ஏமாற்றி விட்டார் என்பதை மட்டும் ராதிகா பாக்கியாவிடம் கூறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement