மலையாள நடிகையான குள்ளப்புள்ளி லீலா ரஜனியின் முத்து படம் மூலம் அறிமுகமானவர்.அரண்மனை 3, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
அத்தோடு விஷாலின் மருது படத்தில் அவரது பாட்டியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியவர்.கேரளாவை சேர்ந்த அவர் எக்கச்சக்க மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும் குள்ளப்புள்ளி லீலா சமீபத்தில் இறந்துவிட்டார் என youtubeல் செய்தி பரவியது. அதை பார்த்து பலரும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அந்த செய்தி லீலாவுக்கே சென்றபோது கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். காரணம் அவர் உயிரோடு இருக்கும்போதே யாரோ வதந்தி பரப்பி இருக்கிறார்களாம்.
இந்நிலையில் இந்த வதந்தி குறித்து நடிகை குள்ளப்புள்ளி லீலா தெரிவித்திருப்பதாவது…, `
`இதுபோன்ற தவறானச் செய்திகளைத் தயவு செய்து பரப்ப வேண்டாம். இந்த யூடியூப் செய்தியைக் கேட்டு, தெரிந்தவர்கள், உறவினர்கள் என ஏராளமானவர்கள் போன் செய்து விசாரித்தார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் சேனல் நடத்தும் பலர் லைக்ஸ் மற்றும் ஷேரிங்கிற்காக தவறான தகவல்களைத் தருகிறார்கள். அதன்மூலம் அவர்களுக்குப் பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உயிருடன் இருப்பவர்களைக் கொன்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?. என்னைப் பற்றிய செய்தியை அரை மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- குழந்தையை பறிகொடுத்த நடிகர் படவா கோபி யாருக்கும் தெரியாமல் செய்யும் செயல்..!
- எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதா..?அவரே பதிவிட்ட பதிவு..!
- எனக்கு இந்த நடிகர் மட்டும் தான் நண்பன்.. ராகவா லோரன்ஸ்
- பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்-சிம்பிளாக நடத்தி முடித்து விட்டார்களே…வைரலாகும் புகைப்படம்..!
- கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்… நெஞ்சை நெகிழ வைக்கும் விஜய் சேதுபதியின் பதில்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!