பாலிவுட் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் மனிஷா கொய்ராலா. அந்தவகையில் தமிழிலும் 'பாம்பாய், இந்தியன், முதல்வன், ஆலவந்தான், பாபா' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றார்.
இவ்வாறு தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இதன்பின் இந்தியில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் மனிஷா திருமணம் செய்தமையை தொடர்ந்து சில காலம் படவாய்ப்பில்லாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் இடையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டியில் "பாபாவுக்கு முன் நான் பல நல்ல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். பாபா தோல்விக்குப் பிறகு எனக்கு படவாய்ப்பே வரவில்லை.
பாபா படத்தால் நான் அழிந்தேன், என் சினிமா வாழ்க்கை போச்சு. பாபா வெறும் தோல்வி படம் அல்ல, அது மிகப்பெரிய டிசாஸ்டர். பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்க்கெட் சரிந்தன, இதனை வைத்து ரஜினிகாந்தை பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்." எனக் கூறித் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
Listen News!