• Sep 20 2024

ஆலியா பட்டை விடுத்து கியாரா அத்வானி உடன் கைகோர்த்த ரன்பீர் கபூர் முடிவுக்கு வந்ததா ரன்பீர் கபூரின் திருமணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ரன்பீர் கபூர் இந்தி-மொழி திரைப்படங்களில் நடிக்கும்  இந்திய நடிகர் ஆவார். ஹிந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான இவர், 2012 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பிரபல 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை கபூர் பெற்றுள்ளார்.


நடிகர்களான ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மகன் ஆவார்,அத்துடன் நடிகர்-இயக்குனர் ராஜ் கபூரின் பேரனும் ஆவார். ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பையும் முறை நடிப்பையும் கற்றார் . இவர் அதைத் தொடர்ந்து பிளாக் திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவியாளராக செயற்பட்டார் மற்றும் பன்சாலியின்  சாவரியா திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் . இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்தது. கபூர் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படமான வேக் அப் சித் மற்றும் காதல் நகைச்சுவை அஜப் பிரேம் கி கசாப் கஹானி ஆகியவற்றில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றார். 


ராக்ஸ்டாரில் இசைக்கலைஞராகவும், பர்ஃபியில் மகிழ்ச்சியான காது கேளாத-ஊமை மனிதராகவும் நடித்த கபூரின் நடிப்புக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகள்  கிடைத்தது . காதல் நகைச்சுவை திரைப்படமான யே ஜவானி ஹை தீவானியில் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக ஒரு முன்னணி கதாபாத்தித்தில் நடித்தமை அவரை மேலும் ஒரு நட்சத்திரமாக நிலைநிறுத்தியது. 

தனது சினிமா  வாழ்க்கைக்கு புறம்பாக, கபூர் பல தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறார். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து அணியின் மும்பை சிட்டி எஃப்சியின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இவர் நடிகை ஆலியா பட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இது மட்டுமல்லாது இவர் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஒரு முன்னணி விளம்பர படத்தில் நடிகை கியாரா அத்வானி உடன் இணைந்து மணமக்கள் போல் காட்சியளிக்கும் வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதனைக் காணலாம். 



Advertisement

Advertisement