சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா என்னும் சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வருபவர் தான் மகாலட்சுமி. இவர் இதற்கு முதல் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.இந்த நிலையில் அண்மையில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
செப்டம்பர் 1ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதியினருக்கு பிறகு ட்ரெண்டிங் ஜோடியாக இவர்களே இருக்கின்றனர்.
தற்போது ரவீந்தர் அண்மையில் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என பேச தொடங்கியுள்ளனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவரது வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறது.ஆனால் இது குறித்த சரியான அறிவித்தலை அவர்கள் வெளியிடவில்லை.
மேலும் திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!