இயக்குநர் கொடி இராமக்கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “அருந்ததி” .தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் அதிக வசூலையும் பெற்றது. அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையையும் இத்திரைப்படம் உருவாக்கியது.
இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை அனுஷ்காவின் மார்க்கெட் எங்கயோ சென்றது என்றே கூறலாம். படத்திலும் அனுஷ்கா அந்த அளவிற்கு அருமையாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரை தவிர இந்த படத்தில் வேறு யாரும் நடித்திருக்க முடியுமா என்கிற அளவிற்கு அருமையாக நடித்திருப்பார்.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் அனுஷ்கா நடித்த அருந்ததி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, முதலில் இந்த படத்தில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
பிறகு சில காரணங்களால் ஆனால் அவர் திடீரென விலகியதால் தான் அதற்கு பிறகு அனுஷ்கா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!