• Sep 20 2024

திடீரென குக்வித்கோமாளியில் இருந்து விலகுகின்றாரா ஷிவாங்கி...அவரே வெளியிட்ட தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

குக்வித்கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த மூன்று சீசன்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு நெருக்கமாக அமைந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் 4வது சீசனிலும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் அடுத்தடுத்த வாரங்கள் களைகட்டி வருகின்றன.அத்தோடு கடந்த  வாரங்களாக இந்த குக் வித் கோமாளி சீசனில் பல நிகழ்வுகள் நடைபெற்று ரசிக்களை கவர்ந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.



நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. 4வது சீசன் இப்போது 20 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது. ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்புடன் நகர்ந்த வண்ணம் இருகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து விஜே விஷால் வெளியேற ஷிவாங்கியால் தான் அவர் வெளியேற்றப்பட்டார் என சில கமெண்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தன. இதனையடுத்து ஷிவாங்கி இந்நிகழ்ச்சிக்காக நாங்கள் நிறைய உழைக்கிறோம், யாரும் சாதாரணமாக ஜெயிக்கவில்லை என பதிவு செய்திருந்தார்.



மேலும் தற்போது குக்வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து ஷிவாங்கியை வெளியேற அவரது அம்மா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறாராம், அதாவது அவர் இசைத்துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறாராம். இருப்பினும் ஷிவாங்கி தனது அம்மாவின் வற்புறுத்தலையும் மீறி தான் குக்வித் கோமாளியில் கலந்துகொண்டு வருகிறார் என கூறப்படுகிறது.அத்தோடு இந்த நிகழ்ச்சியியல் இருந்து ஷிவாங்கி வெளியேறப்போகிறார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இது அனைத்தும் வதந்தியே என தற்போது தெரியவந்துள்ளது.அதாவது குக்வித்கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி பங்கு பறுவதற்கு அவரின் தாய்க்கு அதிக விருப்பம்.இவ்வாறான வதந்திக்கு நடுவே ஷிவாங்கி தான் குக்வித் போமாளியில் இருந்து விலகவில்லை என்று குக்வித்கோமாளி சூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.




Advertisement

Advertisement