நடிகர் ரஜினிகாந்த் பால்ய பருவத்திலேயே தனது தாயை இழக்க நேரிட்டதால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் பாலசந்தர் தான். தொடர்ந்து படவாய்ப்பைப் பெற்று வந்த இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் என்ற நட்சத்திர அந்தத்தையும் பெற்றுள்ளார்.
இவர் இறுதியாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து சாதனை படைத்து இருக்கிறது.
மேலும் ரஜினிகாந்த் நடிப்பைத் தாண்டி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தன்னுடைய உடல்நிலை கருதி அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக அறிவித்து விட்டார்.
இது ஒரு புறம் இருக்க, ஜெயிலர் படம் ரிலீஸாவதற்குமுதல் நாள் ரஜினிகாந்த் இமயமலைக்கு சுற்றுலா சென்றிருந்தார்.அத்தோடு பல அரசியல்வாதிகளை சந்தித்து இருந்தார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது அவர் காலில் விழுந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு கவர்னர் பதவி வரப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.இது பற்றி ரஜினியின் அண்ணனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அது ஆண்டவன் முடிவு' என கூறி இருக்கிறார் என்பதும் குறிபப்பிடத்தக்கது.
Listen News!