• Sep 20 2024

இளைப்பாறுகிறாரா தல அஜித்? ரசிகர்களின் நிலை என்னாகுமோ!

stella / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியாகியிருந்தது.இப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அஜித் ஃபார்முக்கு திரும்பிவிட்டார் என ஏகே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவும் உள்ளது. குடும்ப பொழுதுபோக்குடன் ஒரு கதையும், ஆக்ஷன் கதையும் மகிழ் திருமேனி கூறியதாகவும் அதில் ஆக்ஷன் கதை டிக் அடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


மகிழ் திருமேனி இயக்குநராக உறுதி செய்யப்பட்டாலும் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் தயாரிப்பு தரப்பு வெளியிடாமல் இருந்துவருகிறது. அதற்கு காரணமாக, முதலில் இயக்குநரை மற்றும் அறிவிக்காமல் தலைப்புடன் சேர்த்து இயக்குநரை அறிவிக்கலாம் என லைகா திட்டமிட்டிருக்கிறது என சொல்லப்படுகிறது.

பொதுவாக எந்தப் படத்தின் உள் வேலைகளிலும் அஜித் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய வேலை நடிப்பது என்பதோடு நிறுத்திக்கொள்வார். ஆனால் துணிவு கொடுத்த வெற்றி அவரை கூடுதல் உற்சாகப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். எனவே ஏகே 62 கதையில் நிச்சயம் ஏதேனும் பிரமாண்டம் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டரை இயக்குநர் தரப்புக்கும், தயாரிப்பு தரப்புக்கு அஜித் கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.


அஜித்தின் இந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டருக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று இப்போது கசிந்துள்ளது. அதாவது, இந்தப் படத்துக்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம் . எனவே தான் நடிக்காமல் இருக்கப்போகும் இரண்டு வருடங்களுக்கும் பேசும் அளவு இந்தப் படம் இருக்க வேண்டுமென அஜித் விரும்புகிறாராம். மேலும் இந்த இரண்டு வருடங்களில் அவர் ஏகப்பட்ட பைக் ரைடுகளை செய்யப்போவதாகவும் தற்பொழுது கிசுகிசுக்கப்படுகின்றது

Advertisement

Advertisement