கேளடி கண்மனி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். மேலும் இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில மாதத்திலேயே கர்ப்பமான திவ்யா, தனக்கு குழந்தை பிறக்கவுள்ள தகவலை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் திவ்யாவுக்கும் அவரது கணவர் அர்னவ்விற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இதில் அர்னவ் தன்னை அடித்து உதைத்ததில் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் திவ்யா.எனினும் இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
எனினும் தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகை திவ்யாவிற்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது.இதனையும் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.இதற்கு பலரும் வாழ்த்து கூறி இருந்தாலும் இன்னமும் அர்ணவ் ஏன் பிள்ளையை பார்க்கவில்லை என்பதே கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் பிரபல தனியார் ஊடகம் ஒன்றிற்கு அரண்வ் பேட்டி ஒன்கொடுத்துள்ளார்.அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதாவது என்னுடைய குழந்தையை காமி என்று திவ்யாவை கேட்க மாட்டேன்.அதுபோல என்னுடைய குடும்பமும் கேட்காது.ஆனால் அவங்களே வீடியோ காலில் காட்டினா நான் பார்ப்பேன்.எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்க மக்கள் பலரும் இவர்களை திட்டிய நிலையில் அதற்கு பதிலும் கொடுத்துள்ளார்.அதாவது குழந்தை பிறந்து அங்கே தனியாக இருக்கின்றது நீங்ன என்னவென்றால் ஹன்சிதாவுடன் ஆட்டம் போட்டு இருக்கிறீர்களா எனக் கேட்டதற்கு அவர் நான் தனியா அவங்க கூட போகல ..எல்லோரும் டீமாகத் தான் போறோம்.அதே போல திவ்யாவும் போறாங்க தானே.அதை அவங்க போஸ்ட் பண்ண மாட்டாங்க ஆனால் நான் போஸ்ட் பண்ணுவேன் என்னுடைய மனதில் எதுவும் இல்லை.என பதிலளித்துள்ளார்.
அத்தோடு சிலர் கேட்டுள்ளார்கள்.அதாவது நீங்க குழந்தையை ஏன் அனாதையாக விட்டு இருக்கிறீங்க என கேட்டதற்கு சூப்பர் பதில் ஒன்று கொடுத்துள்ளார்.அதாவது அது என்னுடைய குழந்தை அவங்க பார்க்காட்டியும் நான் மூட்டை துாக்கியாச்சும் பார்ப்பேன்.அவன் என்னுடைய இரத்தம் கட்டாயம் நான் பார்ப்பேன்.அது எப்பிடி நீங்க சொல்லாம் அனாதை என்று பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது நீங்க மறுபடியும் திவ்யாவுடன் சேருவீர்களா எனக் கேட்டதற்கு நான் மன்னிக்க ரெடி ஆனால் மறுபடியும் இப்படியொரு தவறு நடக்காது என்று எப்பிடி சொல்லுவீங்க என கேட்டுள்ளார்.
Listen News!