விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, என்ற நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
குறுகிய காலத்தில் விஜய், அஜீத், என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக ஜொலித்தார். இதையடுத்து நகைச்சுவை வேடங்களில் குறைத்துக் கொண்ட சந்தானம் தற்போது நடிகராகவும் நகைச்சுவையாளர் ஆகவும் கதாநாயகன் வேடத்தில் நடித்து வருகின்றார் இதையடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் .சந்தானத்தின் படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து நெட்டிசன்கள் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்கள்.
அது என்னவெனில், ''இன்றைக்கு பிஸியாக இருக்கிற ஹீரோக்களில் சந்தானமும் ஒருவர்.அவர் பிஸியா தான் இருக்காரு,ஆனா அவர் நடிச்ச படங்கள் தான் வர மாட்டெங்குது.ஷாட்லைட் ,டிஜிட்டல்ன்னு சிக்கல் நீடிச்சிட்டே இருக்கு .இதில இன்னொரு தகவல் என்னென்னா இவர் குலுகுலு''என்ற படம் பண்ணினாரு .இதன் இயக்குநர் ரத்தினகுமார்.அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நண்பர் தான்.அவரே வந்து சன் டிவிக்கு சிபாரிசு செய்து '' பிரின்ட் பண்ண படம் வாங்கிக்கோங்க''என்று சொன்னதால அந்த படத்தின் .ஷாட்லைட் ,டிஜிட்டல அவங்க எட்டு அரை கோடிக்கு வாங்கினங்களாம்.
மேலும்,இன்னைக்கு பாத்தீங்களான சந்தானத்தின் படத்தினை ரெண்டு கோடிக்கு மேல் வாங்க மாட்டங்கிறாங்களாம்.அந்தளவிற்கு சந்தானத்தோட மார்க்கேற்றில சரிவு ஏற்பட்டிருக்கு.மதுரையன்பு,சந்தானத்த வைச்சு ஒரு படத்த தயாரிச்சிட்டு இருக்காராம்.சந்தானத்தின் மார்க்கேற்று இந்த மாதிரி டல்லா போய்க்கிட்டு இருக்கிறத பார்த்திட்டு ,அந்த ஷூட்டிங்கயே ரிலே பண்ணி வைச்சிருக்கிறாராம்.இடுப்பிலேயே நிக்கேலையாம் கயிறு ...என்னாத்துக்கு இன்னம் பெரிய வயிறு''என்று சொல்லியும் கலாய்த்து வருகிறார்கள்.
Listen News!