சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார்.
பின் ஜீவானந்தத்தை கொலை செய்ய பிளான் போட்டு அது வேறொரு பிரச்சனையை இழுத்துள்ளது. இப்போது தனது மனைவி ஈஸ்வரி ஜீவானந்தத்தின் முன்னாள் காதலி என்பதை தெரிந்துகொண்டவர் அடுத்த பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
ஈஸ்வரியை வெட்டிவிட முடிவு எடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது அப்பத்தா போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்குள் கெத்தாக நுழைகிறார்.
இந்நிலையில் இந்த சீரியலில் அண்ணன் செய்யும் தவறுகளுக்கு துணை போகாமல் தைரியமாக பேசி வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக நடித்து வருபவர் சக்தி.
இவருக்கு கார்த்திகா எனபவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார், பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துள்ளார்.
தற்போது அவரது திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
Listen News!