தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல்வேறு நடிகர், நடிகைகளும் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். இதில் ஒரு சிலர் மட்டும் எவ்ளோ காலம் ஆனாலும் நெஞ்சை விட்டு அகலாமல் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார்.
இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அருகில் உள்ள நாட்டுசாலை என்ற கிராமத்தில் பிறந்தவர். இவரின் திரையுலகப் பயணமானது 1961-ஆம் ஆண்டு 'ஸ்ரீவள்ளி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலமாக ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து இவர் 'அவள் ஒரு தொடர் கதை' என்ற படம் மூலம் நாயகனாக தோன்றி நடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.
தன்னுடைய நடிப்பின் ஆரம்பகாலத்தில் இருந்து இன்றுவரை இதுவரைக்கும் 400 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார் நடிகர் விஜயகுமார்.
இவர் படங்களில் அதிகம் நடித்து வந்தாலும் 'தங்கம், வம்சம், நந்தினி' மற்றும் 'ராசாத்தி' என தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
விஜயகுமாரிற்கு இரண்டு மனைவிகள். அவர்களிற்குப் பிறந்தவர்கள் மொத்தமாக 5 பிள்ளைகள். இவர்களில் வனிதாவை தவறி மற்ற 4 பேரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர்.
இவரது மகள்கள் மற்றும் மகன் என 4 பேர் சினிமாவில் இருக்கிறார்கள். அத்தோடு இவர்கள் நேற்றைய தினம் தமது தந்தையின் பிறந்தநாளை ஒன்றாக இணைந்து சிறப்பாக கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜயகுமார் பிறந்து வளர்ந்த நாட்டுசாலை என்ற கிராமத்தில் தனது சொந்த வீடு இருந்த இடத்தில் புதியதாக வீடு ஒன்றினைக் கட்டியுள்ளார்.
இந்த வீடானது கடந்த 2,3 வருடங்களுக்கு முன்பு தான் அழகாக கட்டப்பட்டதாம். அத்தோடு கிட்டத்தட்ட 10 பெட்ரூமிற்கு மேல் இப்புதிய வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த புதிய வீட்டின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!