• Sep 20 2024

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் தங்கத்தால் ஆனவையா?-எந்த நிறுவனம் தயாரித்தது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் காவியமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படமானது கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் & டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022, செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய BTS வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பயன்படுத்திய அத்தனை நகைகளும் தங்கத்தால் ஆனவை என அதிகாரப்பூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. "மின்னும் அனைத்தும் பொன்" என குறிப்பிட்டு புதிய BTS வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த நகைகள் அனைத்தும் கிஷண் தாஸ் & கோ நிறுவனம் செய்தவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement