தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் முதல் காட்சியில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கண்டிப்பாக முதல் நாள் வசூல் எதிர்பார்க்காத சாதனையை படைக்கும் என தெரிவிக்கின்றனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய படம் ஜெயிலர் என்பதினால் இவர் மீது பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் இருந்தது.அவற்றை பொருட்படுத்தாமல் தலைவர் ,நெல்சன் தான் தனது இயக்குநர் என்பதில் உறுதியாக இருந்தார்.
தலைவரின் அந்த உறுதித்தன்மை வீண் போகவில்லை .ஏனெனில் ஜெயிலர் படத்திற்கு முதல் காட்சியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவின் மூலம் தவிடுபொடியாக்கிவிட்டார்.
இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ரஜினிகாந்திற்கு மாஸ் கம் பேக் கொடுத்த இயக்குநர் நெல்சன் திலிப்குமார், ஜெயிலர் படத்தை இயக்க ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!