• Sep 20 2024

திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த நகைகளின் பெறுமதி இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

இவர்களின் திருமணப் புகைப்படங்களை மாப்பிள்ளையான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

கடவுளின் அருளாலும், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துகளோடும் தங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் திருமணத்தின் போது அவர் அணிந்திருந்த ஆபரணங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வைடூரியத்தால் ஆன சோக்கர் மற்றும் போல்கி பற்கள் பதிக்கப்பட்ட ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார்.

இந்த ஆரம் வைரம் மற்றும் லோஸ் கட்ஸ் போல்கி மற்றும் வைடூரிய கற்களால் ஆனதாம். அத்தோடு வைடூரியக் கற்களால் ஆன காதணியையும் வளையலையும் அணிந்திருந்தார். இந்த நகைகள் இந்திய மதிப்பின் படி பல கோடிகளைத் தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement