தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள முக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகமாகவுள்ளது.
இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவானது கடந்த 6ம் திகதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இற்த நிகழ்வுக்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தனர்.
அத்தோடு இயக்குநர் மணிரத்னம், ஜெயம் ரவி, கார்த்தி ,த்ரிஷா, ஐஸ்வர்யா, ராய்,பார்த்தீபன், விக்ரம் எனப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த விழாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த போஸ்டரில் த்ரிஷாவின் உடலும் ஐஸ்வர்யா ராயின் தலையும் இணைந்திருப்பது போல தவறாக ஒட்டியுள்ளனர். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இம்சை அரசன் படத்தில் வடிவேலு ஓவியம் வரைந்துகொள்ளும் காட்சி ஞாபகம் வருவதாக இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!