தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் காதல் அழிவதில்லை என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன் என்று பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இது தவிர வல்லவன், காளை, சிலம்பாட்டம் என்று நடித்துக் கொண்டிருந்த இவருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
நடிகராக மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், பாடகராகவும் தனக்குள் பல திறமைகளை கொண்டுள்ள இவரது நடிப்பில் வெளியாகிய முக்கிய திரைப்படம் தான் வல்லவன். இத்திரைப்படத்தில் இவருடன் நயன்தாரா, ரீமாசென், காதல் சந்தியா, சந்தானம் போன்ற பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் இடம்பெற்றுள்ள லூசு பெண்ணே பாடல் மிகவும் பிரபலமானது.
இவரை எழுதிய இந்த பாடல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பேசப்பட்டது. வல்லவன் படத்தில் இடம்பெற்றுள்ள லூசு பெண்ணே பாடல் உள்ள ரகசியத்தையும் அதன் பின்னணியையும் கூறியுள்ளார் எழுத்தாளர் வாலி.
லூசு பெண்ணே பாடல் இடம் பெற்றுள்ள வரிகள் " வாலி போல பாட்டு எழுத எனக்கு தான் தெரியலையே , உன்ன பத்தி பாடாமா தான் இருக்க முடியலையே " என்று எழுதி இருப்பார் சிம்பு.இந்த பாடலை எழுதி முடித்தவுடன் எழுத்தாளர் வாலியிடம் சிம்பு காண்பித்துள்ளார். இதைக் கேட்ட வாலி என்ன கூறியுள்ளார் என்ற த்ரோ பேக் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்படுகின்றது.
பாடலைப் பார்த்த வாலி, சிம்புவுடன் கூறியதாவது,"ஏம்பா என் பேர போட்டு இருக்கியே , உங்க அப்பாவே பெரிய பாடலாசிரியர் தானே. உங்க அப்பாவின் பெயரை போட்டு இருக்கலாம் அல்லவா என்று கேட்டுள்ளார். அதுக்கு சிம்பு அப்பாவிடம் பாடலை காண்பித்து விட்டேன். அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மிகப்பெரிய பாடல் ஆசிரியரான உங்கள் பெயரை பயன்படுத்தியதற்காக என்னை பாராட்டினார் என்று சிம்பு கூறியுள்ளார். இதைக் கேட்ட வாலியும் சரி என்று கூறியுள்ளார். அந்த பாடல் மிகவும் பிரபலமானதையும், ட்ரெண்ட் செட் செய்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!
- தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!