தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடிய முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் நானே வருவேன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை எனலாம்.
இதனையடுத்து தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்து.
1930-40 களில் நடந்த சம்பவங்களாக பீரியட் பிலிமாக இந்தப்படம் உருவாகவுள்ளது.அதில் 'கேப்டன் மில்லர்' படம் சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்று வருகிறது. இங்கு வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை. புகைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சில புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது.
😳 idhu eppo?? https://t.co/xlwhF0GSy8
இதனை கண்ட இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இது எப்போ என்று பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!