லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கென்று அங்கீகாரத்தை கொடுத்தது தான் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி.
ஆனாலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.
இவ்வாறுஇருக்கையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பார்.தற்போது இவர் தான் இயக்கும் புது படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த நிலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர் தன்னுடைய மகளை குறித்து போட்டுள்ள பதிவு பலரையும் மனதளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, இனிய ஓணம் நண்பர்களே. வீட்டில் ஒரு சிறிய கொண்டாட்டம் இருந்தது. எங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆறு மாதங்கள் ஆகிறது. இது ஒரு நெருக்கடி. ஆனால், கடவுள் அருளால் 20 மருத்தவர்கள் தங்களால் இயன்றதை செய்தார்கள். இறுதியாக டாக்டர் ராமசுப்பு இங்கு வரை எங்களுக்கு வழி நடத்தினார். ஸ்ரேயா முழுமையாக குணமடையவில்லை. இருந்தாலும், சிறப்பாக செயல்படுகிறார் என்று பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆறுதலாக கமெண்ட்களை போட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!