ரஜினி நடித்து சூப்பர்ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் காமெடியன் வடிவேலுவும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகின்றார்.
சந்திரமுகி 2 படம் பற்றி பேசி இருக்கும் வடிவேலு 'இந்த படம் உருவாகவே நான் தான் காரணம்' என சொல்லியுள்ளார்.
லைகா மற்றும் இயக்குனர் பி.வாசு என இருவரிடமும் முதலில் பேசி, அவர்கள் இருவரையும் இணைத்து சந்திரமுகி 2 என படம் எடுக்க வைத்தது நான் தான் என வடிவேலு தெரிவித்து இருக்கிறார்.
லைகாவிடம் பேசும்போது அவர்கள் பி.வாசுவிடம் கதை கேட்க அனுப்பினார்கள், அவர் என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்னார். எனினும் அதன் பின் லைக்காவை தயாரிக்க சொல்லலாமா என அவரிடமே கேட்டேன், நீங்களே அவர்களிடமும் பேசுங்க என வாசு அனுப்பி வைத்தார்.
மேலும் இப்படி இரண்டு தரப்பிடமும் மாறி மாறி பேசி சந்திரமுகி 2 படத்தை தொடங்கி வைத்தாராம் வடிவேலு.
Listen News!