தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பலமுகம் கொண்டவர். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
15 வயதில் நடிக்க ஆரம்பித்து இவர் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் தமிழகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பின்னர் இலங்கையிலும் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நடித்தார்.
மேலும் அவரது மிகவும் பிரபலமான படங்களில் சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாடி சொல்லைத் தட்டாதே, மற்றும் கதைநாயகன்.அத்தோடு இவர் நான்கு படங்களையும் தயாரித்துள்ளார்.
நடிகர் எஸ். எஸ். சந்திரன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து முக்கிய பொறுப்பிலும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,நடித்த படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிக்கட்டி இருக்கிறார்.
மேலும் இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர்எஸ். எஸ். சந்திரன் மகன் நடித்த ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் தான் நடிகர் எஸ். எஸ். சந்திரன் இறுதியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிப்பு திறமையை தாண்டியும் இவர் ஒரு அரசியல் பேச்சாளராகவும் விளங்கி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2010ஆம் ஆண்டு அவர் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருந்தாலும் அவருடைய புகழ் இன்னமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திரைப்படங்களை பார்க்கும் போது ரசிகர்கள் பலர் அவரை மிஸ் பண்ணி வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் இவரின் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.இதோ அந்த புகைப்படம்...
Listen News!